Total Pageviews

Saturday, October 03, 2015



செய்தி... துளிகள்...


  • 33-வது அகில இந்திய NJCM கூட்டு ஆலோசனைக் குழு கூட்டம் டெல்லியில்  16-10-2015 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 01-10-2000 ஊதிய திருத்தத்திற்குப் பின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்பட்ட சம்பளக்குறைபாடு... PAY ANOMALIESமற்றும் PAY ABERRATIONS குறித்து உரிய தகவல்கள் பல மாநில நிர்வாகங்களிடமிருந்து டெல்லி அலுவலகத்திற்கு வந்து சேரவில்லை. இவற்றை உடனடியாக அனுப்பி வைக்குமாறு மாநில நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு (FORUM)12-10-2015 அன்று டெல்லியில் கூடுகிறது.
  • AIRTEL நிறுவனத்தின்  4G விளம்பரம் மக்களைத் தவறாக வழி நடத்துவதாகவும்... அதனால் அந்த விளம்பரத்தை திரும்ப பெறவேண்டும் என மத்திய அரசு AIRTEL நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
  • 01-08-2014க்குப்பின் BSNL நிறுவனத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள LICயின் காப்பீட்டு வசதி மாற்றப்பட்டு புதிய ஆயுள் காப்பீட்டு வசதி அமுல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக 01-08-2014க்குப்பின் பணியில் சேர்ந்தவர்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
  
S .சிவகுருநாதன்,மாவட்ட செயலர்  

No comments:

Post a Comment