Saturday, October 24, 2015



GPF-க்கு நிதி ஒதுக்கீடு...














GPF-க்கு தேவையான (தமிழ் மாநிலத்திற்கு : ரூபாய்.12 கோடி)... 
நிதியை நமது மத்திய நிர்வாகம் 23-10-2015 அன்று ரூபாய். 
12 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில்... GPF தொகைக்கு விண்ணப்பித்த தோழர்,
தோழியர்களுக்கு 27-10-2015 அன்று பணப்பட்டுவாடா செய்யப்படும் 
என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடுமையான நிதி நெருக்கடியை காரணம் காட்டி... GPF இல்லை என்ற... நிர்வாகத்தின் நிலையை மாற்றி... GPF-க்கு தேவையான நிதியை... 
போராடி... பெற்றுதந்த... நமது மத்திய... மாநில... சங்கத்திற்கு...
நமது நன்றியை உரித்தாக்குகிறோம்.

என்ன கொடுத்தும் ஒற்றுமை...
என்னையே (எங்களையே) கொடுத்தும் ஒற்றுமை...
- தோழர்.குப்தா.

என்ற தாரக மந்திரத்தை நெஞ்சில் சுமப்பவர்கள் நாம்... 
மக்கள் விரோத... ஊழியர் விரோத போக்கை மட்டுமே கடைப்பிடிக்கும்
இன்றைய  அரசாங்கத்தையும், நிர்வாகத்தையும் எதிர்த்து 
போராட வேண்டுமென்றால், ஊழியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற
வேண்டுமென்றால்... நாம் அமைப்பு ரீதியாக வளர்ந்திட வேண்டும்...
அமைப்பு விதிகளில் ஒன்று தான் நம் மாநாடு... 
மாநாடுகள் நடத்தாமல், அமைப்பு ரீதியாக வளராமல்... 
எதையும் சாதிக்க முடியாது... நல்லவர்கள் தொடந்து... 
பதவிக்கு வரவேண்டும்... பதவிக்காக அல்ல... 
ஊழியர்களின் நலன் காக்க... தொடர்ந்து பாடுபட...

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment