Total Pageviews
Wednesday, June 05, 2019
Monday, June 03, 2019
கவன ஈர்ப்பு நாள்
தமிழ்
மாநில சங்கத்தின் மாவட்ட செயலர்களின் கூட்டம் திருச்சி மாநகரில் 13/05/2019 அன்று நடைபெற்றது. மாநில மட்டதில் பல்வேறு
பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்திட வேண்டும் என்று முடிவு
செய்யப்பட்டது. அதனடிப்படையில் வருகின்ற ஜுன் மாதம் 4 ம் தேதி தமிழகத்தில் கவன ஈர்ப்பு நாள் நடைபெறும்.
கோரிக்கைகள்:
1. ஊழியர்களின் சம்பளத்தில்
பிடித்தம் செய்யப்பட்ட GPF, LIC, PLI, வங்கி, கூட்டுறவு சங்க தவனைத்
தொகைகளை அந்தந்த மாதத்தில் 7 ம் தேதிக்குள் உரிய
கணக்கில் செலுத்திட வேண்டும்.
2. தவனைகள் தாமதமாக
செலுத்தப்பட்டதற்கு ஊழியர்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை. எனவே தவனைகள் தாமதமாக
செலுத்தப்பட்டதால் வங்கிகள் விதித்த தண்டனைக்குரிய வட்டியை (penal interest) நிர்வாகம் ஏற்று கொண்டு
செலுத்த வேண்டும்.
3. LIC,
PLI ஆகிய
நிறுவனங்கள் விதித்துள்ள தாமதக் கட்டணத்தையும் (Late Fee) நிர்வாகம் ஏற்று கொண்டு
செலுத்த வேண்டும்.
4. வங்கிகளுடனான MOU முடிவடைந்தால் , அதை உடனடியாக புதுப்பித்து
ஊழியர்கள் தடையின்றி கடன் பெற்றிட வழி வகுக்க வேண்டும்.
5. PM கேடரில் தவறான fixation என்று DOT சொல்லியவர்களுக்கு Excess Payment
recovery செய்யப்பட்டது. 2016 க்குப் பிறகு அப்படி பிடித்தம் செய்யபட்ட
தொகையை திருப்பி தர ஒத்துக்கொள்ளப்பட்டது. பிடித்தம்
செய்தவ்ர்களுக்கு பணத்தை உடனே திரும்ப வழங்க வேண்டும்
6. RM பணிக்காலத்தை மொத்த சேவைக்
காலத்தில் சேர்த்து கணக்கிடுவதில் பல மாவட்டங்களில் பிரச்சினை நீடிக்கிறது. மாநில நிர்வாகம் வழிகாட்டி
தீர்வுக்கு உதவிட வேண்டும்
.
7. ஒப்பந்த ஊழியர்களின்
பிரச்சினைகளை மாவட்ட மட்டத்தில் பேசிட Nodal Officer களை எல்லா
மாவட்டத்திற்கும் நியமிக்க வேண்டும்.
8. ஒப்பந்த ஊழியர்களுக்கு
பிரதி மாதம் 7 ம் தேதியில் சம்பளம்
ஒப்பந்ததாரர்கள் வழங்கிடுவதை நிர்வாகம் உறுதி செய்திட வேண்டும்.
9. ஒப்பந்த ஊழியர்களின் EPF, ESIயை ஒப்பந்ததாரர்கள் முறையாக கட்டுவதை உறுதி செய்திட
வேண்டும்.
10. செல் டவர்களுக்கு EB கட்டணத்தை உடனுக்குடன் கட்டி, மின்சார துண்டிப்பை தவிர்த்து தடையற்ற சேவை வழங்க
வேண்டும்
11. வருவாய் இல்லாத, நஷடத்தில் இயங்கும் 20/50 க்கு குறைவாக இணைப்புகள் உள்ள
தொலைபேசி நிலயங்களை மூடுவது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும்.
12. Business
Area உருவாக்கத்தில்
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று நடைமுறைப் படுத்த வேண்டும்.
Tuesday, May 28, 2019
8வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் உத்தேசமாக
2019 செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் அதற்கான அறிவிப்பு ஜூன் 3 அன்று
வெளியாகும் என்றும் 27/05/2019 அன்று டெல்லியில் நடைபெற்ற அனைத்து சங்க கூட்டத்தில்
முடிவு செய்யபட்டுள்ளது. தற்போதுள்ள தேர்தல் விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாத
சூழலில் பழைய விதிகளின்படியே தேர்தல் நடைபெறுமா? என்ற
கேள்வி எழுகின்றது.
*******
வணிகப்பகுதி இணைப்பில் இணைக்கப்படும் மாவட்டத்தின் மாவட்டச்சங்கம்
அப்படியே நீடிக்க வேண்டும் எனவும்… JCM தலமட்டக்குழு தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் BSNLEU சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நடைபெறவுள்ள 8வது உறுப்பினர்
சரிபார்ப்புத்தேர்தல் SSA அளவில் நடைபெறுமா? அல்லது வணிகப்பகுதி அளவில் நடைபெறுமா? என்பதைப் பொறுத்தே சங்கங்களின் அமைப்புக்கள் நீடிக்க முடியும் என்று தோன்றுகிறது.
**********
ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 58 ஆகக்குறைக்க
அரசுக்கு DOT பரிந்துரை செய்ய உள்ளதாக பல்வேறு செய்திகள் உலா
வந்தன. இத்தகைய முயற்சி விதிகளுக்கு முரணானது என நமது மத்திய சங்கம் DOT செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது.
*************
நமது மத்திய சங்க விரிவடைந்த மத்திய செயற்குழு மைசூரில் 08/06/2019 முதல் 10/06/2019 முதல் நடைபெறுகின்றது. அதற்கான சிறப்பு
சிறுவிடுப்பு உத்திரவு வெளியாகியுள்ளது.
**********
இந்தியாவில் தொடர்ந்து எண்ணிக்கையில் கூடிவந்த
செல்போன் சந்தாதாரர் எண்ணிக்கை மார்ச் மாதம் குறையத்தொடங்கியுள்ளது. 118 கோடியாக
இருந்த எண்ணிக்கை 116 கோடியாக குறைந்துள்ளது. வோடாபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களில்
செல்போன் சந்தாதாரர் எண்ணிக்கை 3 கோடி அளவிற்கு குறைந்துள்ளது. ஆனாலும் வழக்கம்போல் JIO நிறுவனம் 95 லட்சம்
சந்தாதாரர்களை மார்ச் மாதம் கூட்டியுள்ளது.
*********
போன்மெக்கானிக் இலாக்காத் தேர்வு 08/09/2019 அன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 3207 காலியிடங்கள் உள்ளன. ஆனால் தகுதி உள்ள தோழர்கள் 100 பேர்
கூட தமிழகத்தில் தேறமாட்டார்கள். காரணம் கல்வித்தகுதி SSLC என்பது
குறைக்கப்படவில்லை.
*********
தமிழகத்தில் 04/06/2019 அன்று NFTE சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன
ஈர்ப்பு நாள் நடைபெறுகின்றது.
Wednesday, May 22, 2019
Thursday, May 16, 2019
Sunday, May 12, 2019
Subscribe to:
Posts (Atom)





