Total Pageviews
Friday, May 11, 2018
Tuesday, May 08, 2018
தெருமுனைப்பிரச்சாரம்
BSNL
அனைத்து தொழிற்சங்க
கூட்டமைப்பு
மதுரை மாவட்டம்
BSNL செல்கோபுரங்களைப் பிரித்து
தனித்துணை நிறுவனம் அமைக்கும்...
மத்திய அரசின் BSNL விரோத…
பொதுத்துறை விரோதப் போக்கினைக் கண்டித்தும்…
மத்திய அரசின் தனியார் மய ஆதரவு போக்கினை
மக்களுக்கு அம்பலப்படுத்திடவும்…
வீதிவழி விழிப்புணர்வு பிரச்சாரம்
Monday, April 30, 2018
மே தின வாழ்த்துக்கள்
உழைக்கும் கரங்கள்… உயரட்டும்…
உழைப்பவர் வாழ்வு மலரட்டும்…
தடைகளை அகற்றிடுவோம்…
தலைகளை நிமிர்த்திடுவோம்...
அனைவருக்கும்…
புரட்சிகர...
மேதின நல்வாழ்த்துக்கள்.
நமது முதன்மை பொதுமேலாளர் அலுவலக
கிளையின்
மேதின கொடியேற்றம் :
01.05.2018
காலை 11.00 மணிக்கு நடைபெறும்
01.05.2018
காலை 11.00 மணிக்கு நடைபெறும்
தலைமை : தோழர். G.போஸ், CANNER
கொடியேற்றம் : தோழர். A.விஸ்வநாதன், TT
சிறப்புரை : தோழியர். P.F மதினா யாஸ்மின், OS
தோழர்கள், தோழியர்கள்,
அனைவரும்
வருக..... வருக...... சிறப்பத்தருக......
மேநாள்
வர்க்கமாய் உணர்தலே
உயர்திணை…
ஏதோ, வாழ்ந்தோம் என்பது
அஃறிணை.
உயர்திணை…
ஏதோ, வாழ்ந்தோம் என்பது
அஃறிணை.
சங்கமாய் திரள்வதே சரிநிலை
வெறும் சந்ததிப்பெருக்குதல் உயிர்ப்பிழை.
பலரும் போராடி பெற்றதுன் பயன்நிலை
போராடும் வர்க்கத்துடன் சேராதிருப்பது இழிநிலை
வெறும் சந்ததிப்பெருக்குதல் உயிர்ப்பிழை.
பலரும் போராடி பெற்றதுன் பயன்நிலை
போராடும் வர்க்கத்துடன் சேராதிருப்பது இழிநிலை
ஈழமோ, காசுமீரோ
இந்திய மேலாதிக்கக் கொடுங்கொலை…
சிக்காகோவோ, சிங்கூரோ
உரிமைக் கேட்டால் படுகொலை…
இந்திய மேலாதிக்கக் கொடுங்கொலை…
சிக்காகோவோ, சிங்கூரோ
உரிமைக் கேட்டால் படுகொலை…
நமைச்சுற்றி பகை வர்க்கம்
உலகெங்கும் ஓர் இழை,
அரசியல் வேண்டாமென்பது சதி வலை,
அறுத்தெறிந்து! அமைப்பாகு தொழிலாளியே,
மே நாள் அழைக்கிறது!
வர்க்கப் போராட்டமே உன் வாழ்நிலை.
பாட்டாளி வர்க்கமாய் ஒன்று சேர் பயமில்லை!
உலகெங்கும் ஓர் இழை,
அரசியல் வேண்டாமென்பது சதி வலை,
அறுத்தெறிந்து! அமைப்பாகு தொழிலாளியே,
மே நாள் அழைக்கிறது!
வர்க்கப் போராட்டமே உன் வாழ்நிலை.
பாட்டாளி வர்க்கமாய் ஒன்று சேர் பயமில்லை!
எதற்கெடுத்தாலும், “எனக்கு நேரமில்லை
இந்தப் புரட்சி… இயக்கமெல்லாம் பழக்கமில்லை
கொடி பிடித்தல்… கோஷமிடுதல் ஒத்து வராது…
கூட்டமாய் சேர்ந்து நின்றால் உடம்புக்கு ஆகாது”
என ஒதுங்கிக் கொள்பவன் முகத்தைப் பார்த்து
மேலும் சிவக்குது மே நாள்!
இந்தப் புரட்சி… இயக்கமெல்லாம் பழக்கமில்லை
கொடி பிடித்தல்… கோஷமிடுதல் ஒத்து வராது…
கூட்டமாய் சேர்ந்து நின்றால் உடம்புக்கு ஆகாது”
என ஒதுங்கிக் கொள்பவன் முகத்தைப் பார்த்து
மேலும் சிவக்குது மே நாள்!
கடித்து அழிக்க வரும்
கட்டெறும்பை
எதிர்கொண்டு வேர்விடும், விதை.
அரித்துத்தின்ன வரும் கரையானை
முறியடித்து தலைநிமிரும் வேர்,
ஆடு, மாடுகள் மிதித்தும் அடங்காமல்
வேலியோரம் மெல்ல முன்கை உயர்த்தும் செடி,
பசையற்ற வேலி முள்ளை அப்படியே பற்றிக் கொண்டு
குடிசையின் உச்சியில் போய்
சொந்தமாய் பூக்கும் பறங்கிப் பூவின் அழகு!
உனக்கும் வேண்டுமா?
போராடிப் பார்!
எதிர்கொண்டு வேர்விடும், விதை.
அரித்துத்தின்ன வரும் கரையானை
முறியடித்து தலைநிமிரும் வேர்,
ஆடு, மாடுகள் மிதித்தும் அடங்காமல்
வேலியோரம் மெல்ல முன்கை உயர்த்தும் செடி,
பசையற்ற வேலி முள்ளை அப்படியே பற்றிக் கொண்டு
குடிசையின் உச்சியில் போய்
சொந்தமாய் பூக்கும் பறங்கிப் பூவின் அழகு!
உனக்கும் வேண்டுமா?
போராடிப் பார்!
உணவுக் கூடத்திலும்
உளவுபார்க்கும் கேமரா,
வார்த்தையை பிடுங்கி
உனது வர்க்க உணர்வை சோதிக்கும் சூப்பர்வைசர்,
கட்டளைக்கு எதிராக இமைத்தாலே
பணிநீக்கும் அதிகாரம்,
புரையேறினாலும்
சக தொழிலாளியிடம் தண்ணீர் கேட்க கை நீட்டாமல்
தானே தலையில் அடித்துக் கொண்டு
தனியே ஒதுங்கும் பயம்கொண்ட தொழிலாளி
உளவுபார்க்கும் கேமரா,
வார்த்தையை பிடுங்கி
உனது வர்க்க உணர்வை சோதிக்கும் சூப்பர்வைசர்,
கட்டளைக்கு எதிராக இமைத்தாலே
பணிநீக்கும் அதிகாரம்,
புரையேறினாலும்
சக தொழிலாளியிடம் தண்ணீர் கேட்க கை நீட்டாமல்
தானே தலையில் அடித்துக் கொண்டு
தனியே ஒதுங்கும் பயம்கொண்ட தொழிலாளி
இத்தனைக்கும் மத்தியில்
ஆங்கே… ஒரு சங்கத்தை உருவாக்கி
கொடியேற்றி தலைநிமிரும் தொழிலாளர்..
அவர் போராட்ட அழகில்
மே நாள் சிலிர்க்கும்!
ஆங்கே… ஒரு சங்கத்தை உருவாக்கி
கொடியேற்றி தலைநிமிரும் தொழிலாளர்..
அவர் போராட்ட அழகில்
மே நாள் சிலிர்க்கும்!
உயிரைக்கொடுத்துப் போராடி
மேநாள் தியாகிகள் பெற்றுக்கொடுத்த உரிமைகளை
ஒவ்வொன்றாய் இழப்பது
நம் வாழ்நாளின் கேவலம்.
மேநாள் தியாகிகள் பெற்றுக்கொடுத்த உரிமைகளை
ஒவ்வொன்றாய் இழப்பது
நம் வாழ்நாளின் கேவலம்.
உழைப்பை கூலிக்கு விற்பதையே
எதிர்த்தவர்கள் அவர்கள் – இன்றோ
உணர்ச்சியையும் கூலிக்கு விற்கத் தயார்,
உலகமயச் சுரண்டலுக்கும் இணங்கத் தயார்.
இருப்பவர்களின் காட்சிகளைப் பார்த்து
இறந்தவர் கனவு அஞ்சுகிறது!
எதிர்த்தவர்கள் அவர்கள் – இன்றோ
உணர்ச்சியையும் கூலிக்கு விற்கத் தயார்,
உலகமயச் சுரண்டலுக்கும் இணங்கத் தயார்.
இருப்பவர்களின் காட்சிகளைப் பார்த்து
இறந்தவர் கனவு அஞ்சுகிறது!
மேநாளின் இலக்கு,
எட்டுமணிநேர வேலை மட்டுமல்ல,
முதலாளித்துவத்தையே எடுத்தெறியும் வேலை.
எட்டுமணிநேர வேலை மட்டுமல்ல,
முதலாளித்துவத்தையே எடுத்தெறியும் வேலை.
மேநாளின் சிறப்பு,
நம்மை முதலாளித்துவ சிந்தனையிலிருந்து
விடுவித்துக் கொள்வதுதான்…
நம்மை முதலாளித்துவ சிந்தனையிலிருந்து
விடுவித்துக் கொள்வதுதான்…
செய்! மேநாள் சிலிர்க்கும்…
Thursday, April 26, 2018
JE(TTA) இலாக்காத்
தேர்வு
முடிவுகள்
28/01/2018 அன்று
நடைபெற்ற JE(TTA) இலாக்காத்தேர்வு
முடிவுகள் 23/04/2018 CORPORATE அலுவலகத்தால்
வெளியிடப்பட்டுள்ளது.
அகில
இந்தியா முழுவதும் 9145 காலியிடங்கள்
இருந்தன.
ஆனால்
நாடு முழுக்க 95 தோழர்கள்
மட்டுமே
தேர்வில் வெற்றி
பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் தேர்ச்சி
பெற்றவர்கள்
- M.செல்வகுமார் - OC
- விஜயகுமார் துரைசாமி -OBC
- AS.குருபிரசாத் - OBC
- S.ஜூலி - SC
- D.சுரேஷ்குமார் - SC
- P.சந்திரன் - ST
வெற்றி பெற்ற
தோழர்களுக்கு நமது
வாழ்த்துக்கள்.
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
தெருமுனைப் போராட்டம்
24/04/2018 அன்று BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
NFTE பொதுச்செயலர்
தோழர்.
C.சிங்
அவர்கள்
தலைமையில்
டெல்லியில் கூடியது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
செல்கோபுரம்
துணை நிறுவனம் எதிர்த்தும்…
மத்திய
அரசின் BSNL விரோதக் கொள்கை எதிர்த்தும்…
07/05/2018 முதல் 11/05/2018 வரை ஐந்து நாட்கள்
நாடு
தழுவிய தெருமுனைப் பரப்புரைகள்…
11/05/2018 அன்று
நாடு
தழுவிய கண்டன ஆர்ப்பாட்டங்கள்…
துணை
நிறுவனம் நிறுத்தக்கோரி…
பிரதம
மந்திரிக்கு தொலைஅச்சு கோரிக்கை மனு….
Subscribe to:
Posts (Atom)



