Total Pageviews

Sunday, August 16, 2015


மாநில செயலர்களின்...

தலைமை செயலகக் கூட்டமும்... முடிவும்...

   

நமது மத்திய சங்கத்தின் அனைத்து மாநில செயலர்களையும்
உள்ளடக்கிய தலைமை செயலகக் கூட்டம் 10-08-2015 
மற்றும் 11-08-2015 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நமது 
மாநில செயலர் தோழர். R.பட்டாபிராமன் 
இக்கூட்டத்தில் பங்கேற்றார்.   

செல் கோபுர தனி துணை நிறுவன உருவாக்கத்திற்கான 
திட்டம் மற்றும் அதன் விளைவுகள், தரைவழி இணைப்பினால் ஆன
அகண்ட அலைகற்றை சேவைகளை வெளி நிறுவனங்களுக்கு
ஒப்பந்தமாக்குவதற்கான திட்டம் மற்றும் அதன் விளைவுகள்,
இந்த ஆண்டு போனஸ் பெறுவதற்கான நமது ஆலோசனைகள்,
டிலாய்ட்டி கமிட்டி முடிவுகளின் அமுலாக்கம் மற்றும் 
செப்டம்பர் 2 அகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்து
முழுமையாக விவாதிக்கப்பட்டது.

சீனியர் TOA கேடர் பெயர் மாற்றத்தில் உள்ள ஊழியர்களின்
மன நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சீனியர் TOA (NE-11 & NE-12) களுக்கு : SUPERINDENTENT
சீனியர் TOA (NE-10) களுக்கு : DEPUTY SUPERINDENTENT
சீனியர் TOA (NE-9) களுக்கு : ASSISTANT SUPERINDENTENT

என பெயர் மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் 
என்றும் முடிவு செய்யப்பட்டது.

தீர்வுக்காக... மற்ற சங்கங்களுடன் இணைந்து... போராடுவது...
எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

S.சிவகுருநாதன்,மாவட்டசெயலர் 

No comments:

Post a Comment