Total Pageviews

Monday, February 25, 2019





குடந்தை 

மாவட்ட மாநாடு

வெற்றி பெற 

வாழ்த்துகின்றோம்.

*********************

NFTE மதுரை 

மாவட்டச்சங்கம்

Thursday, February 21, 2019


BSNL - MTNL  சீரமைப்பு


இன்று 21/02/2019 DCC எனப்படும்

DIGITAL COMMUNICATIONS COMMISSION

(முந்தைய TELECOM COMMISSION) தொலைத்தொடர்பு 

ஆணையம் டெல்லியில்

கூடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

DCC தொலைத்தொடர்பில் கொள்கை 

முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த

உச்சக்கட்ட அமைப்பாகும். 

எனவே இந்தக் கூட்டம் மிகமுக்கியமானதாக 

கருதப்படுகின்றது. 

இன்று நடைபெறும் DCC கூட்டத்தில் BSNL மற்றும் MTNL 

நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான 

வழிமுறைகள்  பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்

என தெரிகிறது.

BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு 

செய்வதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட 

நிறுவனங்களின் தலைவர்கள் ஏற்கனவே அரசிடம் 

சமர்ப்பித்துள்ளனர்.

அவற்றில்

ஓய்வு பெறும் வயதை 58 என குறைப்பது

அதன் மூலம் 2019-20 நிதியாண்டில் சுமார் 3000 கோடி

சம்பளச்செலவைக் குறைக்க வகை செய்வது

விருப்ப ஓய்வுத்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம்

மேலும் 3000 கோடி சம்பளச்செலவைக் குறைப்பது

4G அலைக்கற்றையை உடனடியாக ஒதுக்குவது

காலியாக உள்ள கட்டிடம் மற்றும் இடங்களை

வணிகரீதியாகப் பயன்படுத்தி வருமானம் சேர்ப்பது

போன்ற ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன.

இது தவிரசீரமைப்பு சம்பந்தமாக DOT தனது பங்காக 

சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளது..


அவற்றில்

ஊழியர்களின் சம்பளச்செலவு நிறுவனங்களின்

மிகப்பெரிய பிரச்சினையாக கருதப்படுவதால்

மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும் 

ஊழியர் மற்றும் அதிகாரிகளை BBNL, BHARAT NET 

போன்ற நிறுவனங்களுக்கு

மாற்றுவதன் மூலம் சம்பளச் செலவினங்களை 

பரவலாக்குவது


நிறுவனங்களின் அன்றாடச் செலவுகளை சந்திக்கவும்,  

நிதி ஆதாரங்களை  உறுதிப்படுத்தவும் வங்கிகளிடம் 

கடன் கோருவது….போன்ற ஆலோசனைகளை DOT 

முன்வைத்துள்ளது.


இன்றைய DCC கூட்டத்தில்

BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு 

செய்வதற்கான முடிவுகள் எடுக்கப்படும்

BSNL நிறுவனத்திற்கு 2100Mhz அலைவரிசையில் 4G 

அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்படும் 

என எதிர்பார்க்கப்படுகின்றது. அலைக்கற்றை ஒதுக்கீடு 

செய்வதில் இறுதி ஒப்புதல் மத்திய 

அமைச்சரவையிடம் பெறப்படும். எனவே இன்று 

நடைபெறும் DCC கூட்டம் மிக முக்கியத்துவம் 

வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

BSNL ஊழியர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து 

தங்களது கோரிக்கைகளுக்காக

போராடியும் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் 

நடத்தியும் தங்களது

எதிர்ப்பை அரசிற்கு மிக வலுவாக 

தெரிவித்துள்ளதால்..


இன்று நடைபெறும் DCC கூட்டம் BSNL மற்றும் MTNL 

நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான 

முடிவுகளை நிதானத்தோடு மேற்கொள்ளும்

என எதிர்பார்க்கப்படுகின்றது.





       அடுத்த கட்ட போராட்டம்

நாடு முழுவதும் நமது மூன்று நாள் 

வேலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக 

நடந்தேறியுள்ளது. உணர்வோடு போராடிய 

தோழர்களுக்கு வாழ்த்துக்கள்….


கண்ணிருந்தும் குருடாய்.. 

காதிருந்தும் செவிடாய்..

DOT அதிகாரிகளும்இலாக்கா அமைச்சரும்

சற்றும் கூட சட்டை செய்யாது 

மவுனம் காத்து நின்றனர்.

எனவே இன்று 20/02/2019 கூடிய AUAB அனைத்து 

சங்க கூட்டமைப்பு

கீழ்க்கண்ட முடிவுகளை 

அடுத்த கட்ட நடவடிக்கைகளாக 

அறிவித்துள்ளது.

தொடர்ந்து நமது போராட்டங்களை 

முன்னெடுத்துச் செல்வோம்.

அடுத்த கட்ட நடவடிக்கைகள்

      06/03/2019 அன்று பிரதமர் அலுவலகம் 
 நோக்கி மாபெரும் பேரணி..

        28/02/2019க்குள் அனைத்து MPக்களையும் 
சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...

   பிரதமர் மற்றும் இலாக்கா அமைச்சருக்கு 
TWITTER மூலம் கோரிக்கை விடுத்தல்..

  இலாக்கா அமைச்சரை விரைவில்  சந்தித்து
கோரிக்கைகளை வலியுறுத்தல்...

தோழர்களே

அடுத்த கட்ட நடவடிக்கைகளில் கவனம் 

செலுத்துவோம்

நமது நியாயமான கோரிக்கைகளை 

தொடர்ந்து வலியுறுத்துவோம்