Total Pageviews

Saturday, October 26, 2019


னைவருக்கும் 

னி

தீபாளி


நல் வாழ்த்துக்கள்

Thursday, October 24, 2019



             நீண்ட போராட்டத்திற்குப் பின் மத்திய 

அமைச்சரவை 23/10/2019 அன்று BSNL மற்றும் MTNL 

நிறுவனங்களின் புத்தாக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் 

அளித்துள்ளது.

            இந்திய தேசத்தின் மாபெரும் மக்கள் 

சொத்தாகிய BSNL நிறுவனத்திற்கு வழி பிறந்துள்ளது. 

ஒளி பிறந்துள்ளது.


அமைச்சரைவையின் ஐந்து முடிவுகள்.

           BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு 

உடனடியாக 4G அலைக்கற்றை வழங்கப்படுகின்றது. 

செலவுத்தொகை ரூ.20,140/-கோடி அரசின் நிதியில் 

இருந்து ஒதுக்கப்படுகின்றது. GST வரித்தொகையான 

ரூ.3674/= கோடியும் அரசால் ஏற்றுக்கொள்ளப்படும். 4G 

அலைக்கற்றை ஒதுக்கீடு மூலம் BSNL மற்றும் MTNL 

நிறுவனங்கள் களத்தில் போட்டியாளர்களைச் சந்திக்க 

முடியும். கிராமப்புற பகுதிகள் உள்ளிட்டு தேசம் 

முழுமையும் தரமான சேவையைத் தரமுடியும்.


நிர்வாகச்செலவுகளுக்காகவும், 

முதலீட்டுச்செலவுகளுக்காகவும் தங்களது பழைய 

கடன்களைத் தீர்த்துக்கொள்வதற்கும் ரூ.15,000/- 

கோடியளவில் மத்திய அரசின் உத்திரவாதம் பெற்ற 

நீண்டகால பத்திரங்கள் மூலம் நிதி 

திரட்டிக்கொள்ளலாம்.


நிர்வாகச்செலவுகளைக் குறைப்பதற்காக 50 வயதிற்கு 

மேற்பட்ட ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத்திட்டத்தைத் 

தயாரித்து அறிவிக்கலாம். இதற்காக ஆகும் 

செலவினமான ரூ.17,169 கோடியையும் ஓய்வூதியம், 

பணிக்கொடை மற்றும் COMMUTATION போன்ற 

செலவினங்களையும்  அரசு ஏற்றுக்கொள்ளும். விருப்ப 

ஓய்வுத்திட்ட அம்சங்களும், நடைமுறைகளும் 

மேற்கண்ட நிறுவனங்களால் முடிவு செய்யப்படும்.


தங்களது வளர்ச்சிப்பணிகளுக்கான செலவுகள் மற்றும் 

ஊழியர் ஓய்வுக்கால செலவுகளுக்காக BSNL மற்றும் 

MTNL நிறுவனங்கள் தங்களது அசையாச்சொத்துக்களை 

பணமாக்கிக்கொள்ளலாம்.


BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் இணைப்பு 

கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.


மேற்கண்ட புத்தாக்கத் திட்டத்தின் மூலம் BSNL 

மற்றும் MTNL நிறுவனங்கள் தரமான நம்பகமான 

தங்களது சேவையை தேசம் முழுவதும்... தேசத்தின் 

மூலைமுடுக்குகள் தோறும் வழங்கிட வகை 

செய்யப்படுகின்றது.

Friday, October 18, 2019


உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

18/10/2019 அன்று நாடு முழுவதும் 
நடைபெறவிருந்த  BSNL   அனைத்து சங்க 
உண்ணாவிரதப் போராட்டம்  நிர்வாகத்துடன் நடந்த 
பேச்சுவார்த்தையின்  அடிப்படையில் 
விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
                         
அன்று 17/10/2019 நடந்த பேச்சுவார்த்தையில் 
NFTE, BSNLEU, AIBSNLEA , SNEA, FNTO, BSNLMS, SNATTA, ATM 
BSNL, BSNL OA  மற்றும் TOA BSNL ஆகிய சங்கங்கள் 
கலந்து கொண்டன. காலை 10 மணியளவில் 
DIRECTOR(HR) இயக்குநர்(மனிதவளம்)மற்றும் உயர்
அதிகாரிகளுடனும்...  மாலை 03 மணியளவில் 
CMDயுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  

  பிரச்சினைகளின் தீர்வில் நிர்வாகம் அளித்த 
உறுதிமொழிகளின் பேரில் நமது 
உண்ணாவிரதப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிர்வாகத்தின் உறுதிமொழிகள்:
செப்டம்பர் மாதச்சம்பளம் 23/10/2019 அன்று வழங்கப்படும்.
ஒப்பந்த ஊழியர் சம்பளத்திற்கான நிதி விரைவில் வழங்கப்படும்.
BSNL புத்தாக்கம் குறித்து 23/10/2019ம் தேதி வாக்கில் 
நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 
முடிவு செய்யப்படும்.
மத்திய அமைச்சரவைக் கூட்ட முடிவிற்குப்பின்  
BSNLக்கு வங்கிக்கடன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

நிர்வாகத்தின் வேண்டுகோள்:

சேவைத்தரத்தை உயர்த்த வேண்டும். 
செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். 
வருவாயை உயர்த்த வேண்டும்.
                              
 பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் 
வழங்காதது மேலும் அவர்களின் எண்ணிக்கையைக் 
குறைப்பது போன்ற செயல்களால் BSNL சேவை 
முற்றாக முடங்கிப்போயுள்ள நிலை நிர்வாகத்திடம் 
சுட்டிக்காட்டப்பட்டது. நிர்வாகம் ஆவண செய்வதாக 
உறுதி அளித்துள்ளது.
மேலும் BSNL நிர்வாகத்தின்  வெளிப்படையற்ற 
தன்மையும்,  நடவடிக்கைகளும், தொழிற்சங்கங்களை 
மதிக்காத போக்கும் தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டது. 
வருங்காலங்களில் நிர்வாகத்திற்கும் சங்கங்களுக்கும் 
இடையில் நல்லுறவு பேணப்படும் எனவும்
COMMUNICATION GAP எனப்படும் பரிமாற்ற இடைவெளி 
இனி இருக்காது எனவும் நிர்வாகத்தால் உறுதி 
அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட முன்னேற்றங்களின் அடிப்படையில் 
18/10/2019 அன்று நடைபெறவிருந்த அகில இந்திய 
உண்ணாவிரத அறப்போராட்டம் 
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
30/10/2019 அன்று AUAB அனைத்து சங்க கூட்டமைப்பு கூடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றிமுடிவெடுக்கும்.

Saturday, October 12, 2019


BSNL அனைத்து சங்க 

கூட்டமைப்பின் சார்பாக
**************************************
நாடு தழுவிய 

உண்ணாவிரதம்
**************************************


BSNL  புத்தாக்கம் கோரி...
18/10/2019 வெள்ளிக்கிழமை
தலைநகர் டெல்லி மாநிலத்தலைநகரங்கள்
மற்றும் மாவட்டத்தலைநகர்களில்


நாடு தழுவிய

உண்ணாவிரதம்


கோரிக்கைகள்

மத்திய அரசே...

BSNL புத்தாக்கத்திட்டத்தை உடனடியாக அறிவிப்பு செய்...

BSNL நிறுவனத்திற்கு உடனடியாக 4G அலைக்கற்றை 

ஒதுக்கீடு செய்...

BSNL நிறுவனத்தின் நிதியாதாரத்தை உறுதி செய்...

BSNL நிறுவனத்திற்கு உடனடியாக வங்கிக்கடன் வழங்கிடு...

BSNL நிறுவனத்தின் நிலவிற்பனைத் திட்டத்திற்கு 
ஒப்புதல் வழங்கு...

ஓய்வூதிய மாற்றத்தை அமுல்படுத்து...

3வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்து...

BSNL நிர்வாகமே...

ஒப்பந்த ஊழியர்கள் சம்பளத்தை உடனே வழங்கு... 

நிரந்தர ஊழியர்களின் செப்டம்பர் மாத சம்பளத்தை 
உடனே வழங்கு...

சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 
நிலுவைகளை உடனே செலுத்து...

வாடகைக்கட்டிடங்கள் மற்றும்  நில வாடகைகளை
உடனே செலுத்து...

மின் கட்டணத்தை தடையின்றி செலுத்து...

BSNL நேரடி ஊழியர்களுக்கு...

30 சத ஓய்வூதிய பலன்களை அமுல்படுத்து...

தோழர்களே...

மீண்டும் AUAB... வேண்டும் AUAB...

ஒன்றுபடுவோம்... போராடுவோம்...

Friday, October 11, 2019

வாழ்த்துக்கள் 




AIBSNLEA
மாவட்ட மாநாடு
வெற்றி பெற வாழ்த்துக்கள்



01.10.2019 முதல் 152% IDA 

உத்திரவு வெளியிட்டுள்ளது  







Wednesday, October 09, 2019


மதுரை காரைக்குடி இணைந்த

கோரிக்கை ஆர்ப்பாட்டம்

தமிழ் மாநிலச்சங்க அறைகூவலுக்கிணங்க...
10/10/2019 அன்று
தமிழகம் தழுவிய  கோரிக்கை ஆர்ப்பாட்டம்

*********************************************************************************
கோரிக்கைகள்

BSNL நிர்வாகமே...
நிரந்தர ஊழியர்களின் செப்டம்பர் 
மாதச்சம்பளத்தை
உடனடியாக வழங்கிடு...


ஒப்பந்த ஊழியர்களின் பலமாதக் 
கூலியை உடனடியாக 
பட்டுவாடா செய்...

சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட

LIC, PLI, GPF வைப்பு நிதி, வங்கிக்கடன்,

கூட்டுறவு சங்கக்கடன் நிலுவைகளை

உடனடியாக செலுத்திடு...



*********************************************************************************


கோரிக்கை ஆர்ப்பாட்டம்

10/10/2019 – வியாழன் மதியம் 01.00 மணி

தல்லாகுளம் வாடிக்கையாளர் சேவை மையம் – 

மதுரை


*********************************************************************************

பங்கேற்பு : தோழர்கள்

K. நடராஜன் – மாநிலச்செயலர்

T. பரிமளம் – மாநில உதவித்தலைவர்

D. செந்தில் குமார் - மாநில உதவிச்செயலர்

G. சுபேதார் அலிகான் - மாநில அமைப்புச் செயலர்

S. சிவகுருநாதன் – மாவட்டத்தலைவர் மதுரை

B. லால்பகதூர் – மாவட்டத்தலைவர் காரைக்குடி

G. இராஜேந்திரன் - மாவட்டச் செயலர் மதுரை

V. மாரி - மாவட்டச்செயலர்  காரைக்குடி 

தோழர்களேவாரீர்