Total Pageviews

Sunday, April 21, 2019



  மாவட்ட செயற்குழு- மதுரை



நடைபெறும் இடம் :-  வேடசந்தூர்,      
            
            பத்திரகாளியம்மன்  கோவில் மண்டபம்

         நாள்:- 23.04.2019  செவ்வாய்க்கிழமை

         நேரம்:- காலை 10.00 மணி,  



ஆய்படு பொருள் :-

Ø BSNL சந்திக்கும் நெருக்கடி

Ø VRS அசச்சுருத்தல்

Ø அமைப்பு நிலை

Ø தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள்.

******************

சிறப்புரை:-

                 தோழர் .K.நடராஜன், மாநில செயலர்.

******************

    தோழமையுள்ள.
G.ராஜேந்திரன்.
                                                                        
                              



Thursday, April 11, 2019




நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்


புத்தாக்கம் என்ற பெயரில் BSNL ஊழியர்களுக்கு VRS 

திட்டத்தை அமுல்படுத்தும் நோக்கில் அரசு விரைந்து 

செயல்பட்டுவருகிறது. புத்தாக்கம் குறித்து ஊழியர் 

சங்கங்களுடன் கலந்தாலோசிக்க இதுவரை DOT நிர்வாகம் 

ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் BSNLக்கு சொந்தமான நிலங்களை விற்று 

காசாக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாயை BSNL 

ஊழியர்களுக்கு VRS திட்டத்தை அமுல்படுத்துவதற்கு 

திருப்பி விடுவது என மத்திய அரசு தன்னிச்சையாக 

முடிவெடுத்துள்ளதுVRS அமுல்படுத்துவது என்பது 

BSNL ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து 

தனியார்மயப்படுத்துவதற்கான அரசின் தந்திரமே.

அரசின் இம்முடிவிற்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில் 

12.04.2019 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை 

மேற்கொள்ளப்போவதாக ஊழியர் சங்கங்கள் 

அறிவித்துள்ளன.

இதற்கான முறையான அறிவிப்பை NFTE , BSNLEU , 

AIBSNLEA , BSNLMS , BSNLATM, TEPU , BSNLOA ஆகிய 

7 சங்கங்களின் பொதுச்செயலர்கள் கூட்டாக DOT 

செயலருக்கும் , BSNL CMD அவர்களுக்கும் 09.04.2019 

அளித்துள்ளனர்.


1.        01.04.2018 தேதிக்குப் பிறகு உருவாகியுள்ள காலியிப்பணியிடங்களுக்கு  கருணை அடிப்படையிலான  பணிநியமனத்தை நிதிச் சுமையின் காரணமாக 3 வருடங்களுக்கு நிறுத்தி வைப்பதாக BSNL இயக்குநர் குழு முடிவெடுத்துள்ளது.

2.      BSNLEU சங்கம் தனியாக நாடுமுழுக்க 13/04/2019 முதல் 30/04/2019 வரை “SAVE BSNL SAVE NATION”  என்ற பிரச்சாரப் பரப்புரை செய்ய முடிவெடுத்துள்ளது. AUAB கூட்டமைப்பிடம் ஆதரவு கேட்டுள்ளது. 

3.      18/04/2019 வியாழன்று தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழக BSNL நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் ஏகப்பட்ட விடுமுறைகள்.

4.      ஆறு மாதங்களுக்கு மேலாக எந்த வித முன்னறிவிப்பும் இன்றி பணிக்கு வராமல் பாழாய்ப்போய்க் கொண்டிருக்கும் ஊழியர்கள் மேல் 15/04/2019க்குள் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டெல்லித் தலைமையகம் உத்திரவிட்டுள்ளது.

5.      மக்கள் சொத்தாம் BSNL நிறுவனத்தை அழித்தொழிக்க நினைக்கும் மத்திய அரசின் பொதுத்துறை விரோதப்போக்கைக் கண்டித்து AITUC மத்திய சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. AITUC அறிக்கைகளோடு நின்றுவிடாமல் ஆவண செய்திட வேண்டும்.

6.      BBNL  க்கு BSNL லிருந்து Deputation  லில் அதிகாரிகள் விரைவில் அனுப்பபட உள்ளனர். Director HR BSNL &Director Operation BBNL இருவரும் சந்தித்து பேசி முடிவு எடுத்ததன் அடிப்படையில் BBNL க்கு தேவையான Technical officers (JTO, SDE ) ம் Accounts அதிகாரிகள்(AO, JAO) BSNL லிருந்து Deputation ல் அனுப்பபட உள்ளனர்.  விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.. Option list அனுப்புவதற்கு இறுதி நாள் 11/04/2019.

7.      01/04/2019 முதல் IDA 2.6 சதம் உயர்ந்து 141.4 சதத்தை எட்டியுள்ளது. இதற்கான DPE உத்திரவு 02/04/2019 அன்று வெளியாகியுள்ளது. 

IDA மட்டுமே BSNL ஊழியர்களின் ஒரே ஆறுதல்.


Friday, April 05, 2019

BSNL அனைத்து சங்ககூட்டமைப்பு 

சார்பில் சஞ்சார் பவன் நோக்கி 

பேரணி




மத்திய அரசின்…. DOT இலாக்காவின்

BSNL ஒழிப்புத்திட்டத்தை தடுத்து நிறுத்திட

BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின்

மறுக்கப்படும் உரிமைகளை வென்றிட

சஞ்சார் பவன் நோக்கி

மாபெரும் பேரணி….

அனைத்து மாநிலங்களிலும் இருந்து 

தலைவர்கள் பங்கேற்பு….


பேரணி வெற்றி பெறட்டும்….
                 
                     BSNL நிலை பெறட்டும்….
             
                 ஊழியர்கள் உரிமை பெறட்டும்