Total Pageviews

Thursday, April 11, 2019




நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்


புத்தாக்கம் என்ற பெயரில் BSNL ஊழியர்களுக்கு VRS 

திட்டத்தை அமுல்படுத்தும் நோக்கில் அரசு விரைந்து 

செயல்பட்டுவருகிறது. புத்தாக்கம் குறித்து ஊழியர் 

சங்கங்களுடன் கலந்தாலோசிக்க இதுவரை DOT நிர்வாகம் 

ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் BSNLக்கு சொந்தமான நிலங்களை விற்று 

காசாக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாயை BSNL 

ஊழியர்களுக்கு VRS திட்டத்தை அமுல்படுத்துவதற்கு 

திருப்பி விடுவது என மத்திய அரசு தன்னிச்சையாக 

முடிவெடுத்துள்ளதுVRS அமுல்படுத்துவது என்பது 

BSNL ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து 

தனியார்மயப்படுத்துவதற்கான அரசின் தந்திரமே.

அரசின் இம்முடிவிற்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில் 

12.04.2019 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை 

மேற்கொள்ளப்போவதாக ஊழியர் சங்கங்கள் 

அறிவித்துள்ளன.

இதற்கான முறையான அறிவிப்பை NFTE , BSNLEU , 

AIBSNLEA , BSNLMS , BSNLATM, TEPU , BSNLOA ஆகிய 

7 சங்கங்களின் பொதுச்செயலர்கள் கூட்டாக DOT 

செயலருக்கும் , BSNL CMD அவர்களுக்கும் 09.04.2019 

அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment