Total Pageviews

Sunday, October 07, 2018


BSNL   டவர்கள்  குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆகஸ்டு மாதம் தமிழகம்,  
உத்திரப்பிரதேசம்  (கிழக்கு
மற்றும் (மேற்கு),
உத்தர்கான்ட் மாநிலங்களில் உள்ள 6945  
BSNL Tower  களையும்  நிர்வகித்து 
பராமரிக்கும்பொறுப்பை ITI நிறுவனத்திற்கு 10 ஆண்டுகளுக்கு வழங்கி BSNL நிர்வாகம் உத்தரவுவெளியிட்டதுஇதற்காக BSNL    Rs 6633.56 கோடி ரூபாயை ...ITI க்கு வழங்கியது.


உடனடியாக அனைத்துச் சங்கம் சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கு நமது நிறுவனத்தின் CMD இந்த நடவடிக்கை மூலம் 1000 கோடி வருமானம் கிடைக்கும் என தெரிவித்தார். இருப்பினும் நமது தலைவர்கள் இந்நடவடிக்கை நமது நிறுவனத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் என தங்களது கருத்தை பதிவு செய்தனர்.


தற்போது நமது கடும் ஆட்சேபங்களையும் மீறி இந்தியா முழுவதும் நமது நிறுவனத்திற்கு சொந்தமான டவர்களை பராமரிக்க இந்தியா முழுவது 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ITI உட்பட மேலும் மூன்று தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை விடப்பட்டுள்ளன.



அதன்படி.
M/s Mahendra Mahendra  
நிறுவனத்திற்கு 6329 டவர்களும்...

M/s AST Telecom Solar Pvt Ltd என்ற நிறுவனத்திற்கு 4808 டவர்களும்...

M/s Pace Power SystemPvt Ltd  என்ற நிறுவனத்திற்கு 10405 டவர்களும்...
குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

அந்தந்த மாநில CGMகள் உடனடியாக
 உடன்படிக்கையில் கையெழுத்து 
இட்டு டவர்களைதனியார் வசம் As is Where is Basis அடிப்படையில் ஒப்படைக்க வேண்டும்.

Tower   Corporation  எதிர்த்து நாம் போராடி  வரும்
நிலையில் ஒட்டுமொத்த டவர்களையும்
குத்தகைக்கு விடுவதின் மூலம மறைமுகமாக தனது    நோக்கத்தை BJP அரசாங்கம் நிறைவேற்றிவிட்டது.

Tower Corporation செயல்பாட்டுக்கு வருவதற்கு 

முன்பே, நமது கோபுரங்கள் அனைத்தும்

தனியார் கையில்.


நாம் Role Back Tower Corporation தனி செல் கோபுர 

நிறுவனத்தை திரும்பப் பெறு என தொடர்ந்து 

போராடுவோம்.

No comments:

Post a Comment