Total Pageviews

Friday, October 23, 2015



தீபாவளி விடுமுறை 10/11/2015க்கு மாற்றப்பட்டுள்ளது.

மிலாடி நபி விடுமுறை 23/12/2015க்கு மாற்றப்பட்டுள்ளது..


அக்டோபர் 2015 முதல் பணி  நிறைவு பெறும் தோழர்களுக்கு விடுப்புச்சம்பளம் அந்த மாதமே வழங்கப்பட வேண்டும் என CORPORATE  அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.


மனிதவள இயக்குநராகப் பணிபுரியும் திருமதி.சுஜாதாராய்  காலியாக உள்ள  DIRECTOR FINANCE  இயக்குநர் நிதிப் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.


ஒரு மாத போனஸ் உச்சவரம்பான ரூ.3500/-ஐ ரூ.7000/-மாக உயர்த்துவதற்கும், போனஸ் பெறுவதற்கான மாத ஊதியத்தை ரூ.10,000/-லிருந்து ரூ.21,000/-மாக  உயர்த்துவதற்கும்  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது மிக நீண்ட நாள் பிரச்சினையாகும். நமது செப்டம்பர் 2 வேலை நிறுத்தக் கோரிக்கைகளுள் ஒன்றாகும்.


5வது தமிழ் மாநில மாநாட்டிற்கான வரவேற்புக்குழு வேலூர் தோழர்களால் அமைக்கப்பட்டுள்ளது.


பத்தாண்டுகளாக JTO பதவியில் தற்காலிகமாகப் பதவி வகிக்கும் TTA தோழர்களுக்கு மீண்டும் பயிற்சி என்பது தேவையற்றது என தமிழ் மாநிலச்சங்கம் மாநில நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளது.


RELIANCE , AIRCEL மற்றும் MTS தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ஒரே நிறுவனமாக இணைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு இணைப்பு ஏற்பட்டால் தொலைத்தொடர்பில் மூன்றாவது பெரிய நிறுவனமாக புதிய நிறுவனம் அமையும்.

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment