Total Pageviews

Wednesday, November 18, 2015



நமது மத்திய சங்கம் 
BSNL நிர்வாகத்தைச் சந்தித்து 
கீழ்க்கண்ட பிரச்சினைகளை விவாதித்துள்ளது.

2010ம் ஆண்டிற்குப்பின் JAO இலாக்காத் தேர்வு நடைபெறவில்லை. எனவே உடனடியாக காலியிடங்களைக் கணக்கிட்டு  JAO தேர்வை அறிவிக்க மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் எந்தெந்த கேடர்கள் மூன்றாம் பிரிவில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கும் விளக்கம் அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

78.2 சத IDA  சம்பள நிர்ணய அடிப்படையில் வீட்டு வாடகைப்படி HRA வழங்கிட BSNL  நிர்வாகத்தை மத்திய சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நிராகரிக்கப்பட்ட கருணை அடிப்படையிலான விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலிக்கவும், விபத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை  அளிக்கவும் மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தொழிற்சங்கங்கள் CORPORATE  அலுவலகத்தில் அதிகாரிகளை  சந்திப்பதற்கான நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. இது  01/12/2015 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

கேடர் பெயர்மாற்றக்குழுவின்  பரிந்துரையை மீண்டும் BSNL நிர்வாகக்குழுவிற்கு  அனுப்பிட மத்திய சங்கம்  வலியுறுத்தியுள்ளது.

புதிய இணைப்புக்கள் கொடுப்பதற்கு பல்வேறு மாநிலங்களில் கேபிள்கள் இல்லாத நிலை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர்(பொறுப்பு)  

No comments:

Post a Comment