Total Pageviews

Monday, January 22, 2018




 ஒப்பந்த ஊழியர்களின் ஓயாத பிரச்சினைகளை

அகில இந்தியத்தலைவர்

தோழர்.ஆசிக் அகமது அவர்களும்

அகில இந்தியப் பொதுச்செயலர் 

தோழர்.மதிவாணன் அவர்களும்

 தொழிலாளர் நல அமைச்சர் திரு.கங்குவார் 

அவர்களிடமும்... முதன்மைத் தொழிலாளர் ஆணையர்  

திரு.அனில்குமார் நாயக் அவர்களிடமும்…  

19/01/2018   அன்று  தலைநகர் டெல்லியில் சந்தித்து 

விரிவாக எடுத்துரைத்துள்ளனர்


உரிய தேதியில் சம்பளம் இல்லை

உழைப்புக்கேற்ற ஊதிய இல்லை

அடையாள அட்டை இல்லை

ஆண்டுதோறும்  போனஸ் இல்லை

மருத்துவ வசதி இல்லை

மரித்து விட்டால் இழப்பீடில்லை

வாரத்தில் ஓய்வில்லை….

வைப்புநிதியில் நிறைவில்லை….

மொத்தத்தில் மனிதநேயம்

என்பதே  BSNLலில் இல்லை

என்பதை நமது தலைவர்கள் நேர்பட எடுத்துரைத்து


எழுத்துப்பூர்வ கடிதமும் கொடுத்துள்ளனர்….

No comments:

Post a Comment