Total Pageviews

Tuesday, September 04, 2018


JE இலாக்காத்தேர்வில் தளர்வு

28/01/2018ல் நடைபெற்ற JE இலாக்காத்தேர்வில்...

மிகக்கடினமான கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆயிரக்கணக்கான காலியிடங்கள் இருந்தும்

ஒரு நூறு தோழர்களே தேர்வில் வெற்றி பெற்றிருந்தனர்.

எனவே மதிப்பெண்களில் தளர்வு கேட்டு

நமது சங்கம் தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தியது.

நமது கோரிக்கையை ஏற்று 31/08/2018 அன்று நிர்வாகம்

தகுதி மதிப்பெண்களைத் தளர்த்தி உத்திரவிட்டுள்ளது.


தற்போதைய தளர்வின்படி... 

OC மற்றும் OBC பிரிவினர் தனித்த பாடங்களில் குறைந்தபட்சம் 20 

சதமும்... ஒட்டுமொத்தமாக 30 சதமும்...SC/ST பிரிவினர் 

தனித்த பாடங்களில் குறைந்தபட்சம் 15 சதமும்...

ஒட்டுமொத்தமாக 23 சதமும் மதிப்பெண்கள் பெற வேண்டும். 

மொத்தத்தில் AGGREGATE எனப்படும் மொத்த மதிப்பெண்களில்

மதிப்பெண்களை மட்டும் அனைத்துப் பிரிவினருக்கும் நிர்வாகம் 

தளர்த்தியுள்ளது. இந்த தளர்வு ஒருகட்டமாக மட்டுமே 

அனுமதிக்கப்படுகின்றது. மதிப்பெண் தவிர வயதுவரம்பு

சேவைக்காலம் போன்றவற்றில் தளர்வு கிடையாது. 

மேற்கண்ட தளர்வால்...

மேலும் சில நூறு தோழர்கள் பயன்பெறுவார்கள்.

No comments:

Post a Comment