Total Pageviews

Monday, June 03, 2019






கவன  ஈர்ப்பு  நாள்


தமிழ் மாநில சங்கத்தின் மாவட்ட செயலர்களின்  கூட்டம் திருச்சி மாநகரில் 13/05/2019 அன்று நடைபெற்றதுமாநில மட்டதில் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி  போராட்டம் நடத்திட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதுஅதனடிப்படையில் வருகின்ற ஜுன் மாதம் ம் தேதி தமிழகத்தில் கவன  ஈர்ப்பு  நாள் நடைபெறும்.

கோரிக்கைகள்:

1.            ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட GPF, LIC, PLI, வங்கிகூட்டுறவு சங்க தவனைத் தொகைகளை  அந்தந்த மாதத்தில் ம் தேதிக்குள் உரிய கணக்கில் செலுத்திட வேண்டும்.

2.            தவனைகள் தாமதமாக செலுத்தப்பட்டதற்கு ஊழியர்கள் எந்த வகையிலும் காரணம் இல்லைஎனவே தவனைகள் தாமதமாக செலுத்தப்பட்டதால் வங்கிகள் விதித்த  தண்டனைக்குரிய வட்டியை (penal interest) நிர்வாகம் ஏற்று கொண்டு செலுத்த வேண்டும்.

3.          LIC, PLI ஆகிய நிறுவனங்கள் விதித்துள்ள தாமதக் கட்டணத்தையும் (Late Fee) நிர்வாகம் ஏற்று கொண்டு செலுத்த வேண்டும்.

4.            வங்கிகளுடனான MOU முடிவடைந்தால் அதை உடனடியாக புதுப்பித்து ஊழியர்கள் தடையின்றி கடன் பெற்றிட வழி வகுக்க வேண்டும்.

5.            PM கேடரில் தவறான fixation என்று DOT சொல்லியவர்களுக்கு Excess Payment recovery செய்யப்பட்டது2016  க்குப் பிறகு அப்படி பிடித்தம் செய்யபட்ட தொகையை திருப்பி தர ஒத்துக்கொள்ளப்பட்டதுபிடித்தம் செய்தவ்ர்களுக்கு பணத்தை உடனே திரும்ப வழங்க வேண்டும்

6.            RM பணிக்காலத்தை மொத்த சேவைக் காலத்தில் சேர்த்து கணக்கிடுவதில் பல மாவட்டங்களில் பிரச்சினை நீடிக்கிறதுமாநில நிர்வாகம் வழிகாட்டி தீர்வுக்கு உதவிட வேண்டும்
.
7.            ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சினைகளை மாவட்ட மட்டத்தில் பேசிட Nodal Officer களை எல்லா மாவட்டத்திற்கும் நியமிக்க வேண்டும்.

8.            ஒப்பந்த ஊழியர்களுக்கு பிரதி மாதம் ம் தேதியில் சம்பளம் ஒப்பந்ததாரர்கள் வழங்கிடுவதை நிர்வாகம் உறுதி செய்திட வேண்டும்.

9.            ஒப்பந்த ஊழியர்களின் EPF, ESIயை ஒப்பந்ததாரர்கள் முறையாக  கட்டுவதை உறுதி செய்திட வேண்டும்.

10.          செல் டவர்களுக்கு EB கட்டணத்தை உடனுக்குடன் கட்டிமின்சார துண்டிப்பை  தவிர்த்து தடையற்ற சேவை வழங்க வேண்டும்

11.          வருவாய் இல்லாத,  நஷடத்தில் இயங்கும் 20/50 க்கு குறைவாக இணைப்புகள் உள்ள தொலைபேசி நிலயங்களை மூடுவது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும்.

12.          Business Area உருவாக்கத்தில் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று நடைமுறைப் படுத்த வேண்டும். 

No comments:

Post a Comment