Total Pageviews

Saturday, April 18, 2015


ஏப்ரல் 21 & 22

எழுச்சியுடன் போராடுவோம்...


தோழர்களே....

நேற்று 17/04/2015 நமது கூட்டமைப்பின் சார்பாக போராட்ட 

கோரிக்கைகளின் மீது CMDயுடன் 3 மணி நேரத்துக்கும் 

அதிகமாக பேச்சுவார்த்தை   நடத்தப்பட்டது.  



நமது 20 கோரிக்கைகளில் 17 கோரிக்கைகள் 

முழுக்க மத்திய அரசு மற்றும் DOT சம்பந்தப்பட்டது. 

அந்த 17 கோரிக்கைகளில் 7  கோரிக்கைகளின் இன்றைய நிலவரம் 

STATUS பற்றி BSNL  நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 


10 கோரிக்கைகள் முழுக்க முழுக்க 

 அரசுடன் விவாதிக்கப்பட வேண்டியது என BSNL கூறியுள்ளது. 


எனவே  BSNL  நிர்வாகம் தனது  வரம்புக்குட்பட்ட 

3 கோரிக்கைகளுக்கு மட்டுமே  பதில் அளித்துள்ளது. 



ஆகவே  17 கோரிக்கைகளுக்காக  நாம் அரசு மற்றும் DOT 

செயலருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. ஆனால் 

 பிரதமருடன் வெளிநாட்டுப் பயணத்தில் உள்ள DOT செயலர்

 20/04/2015 அன்றுதான் தாயகம் திரும்புகிறார். 

 மேலும் இத்தனை மாத அவகாசம் இருந்தும் நமது இலாக்கா 

அமைச்சருக்கு நம்மை அழைத்துப் பேச நேரமில்லை. 


தோழர்களே.. 

இது நாடு காக்கும் போராட்டம்.. 

நமது வீடு காக்கும் போராட்டம்.. 

நமது வருங்கால வாழ்வு காக்கும் போராட்டம்..

எனவே நமது போராட்டம் திட்டமிட்டபடி  நடைபெறுகிறது. 

 கூட்டமைப்பு  20/04/2015 அன்று கூடி போராட்டத்திட்டங்களை 

வகுக்கும்.


ஏப்ரல் 21, 22 வேலைநிறுத்தத்தில் 

பங்கேற்பது நமது கடமை. இதை வெற்றிகரமாக செய்து முடிப்பதே

நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.இதை உணர்வோம். பங்கேற்போம்.



வேலை நிறுத்த போராட்டம் ... வெற்றியாக்குவோம் !

அனைத்து அதிகாரிகள் ,ஊழியர்கள் சங்கம்  அறைகூவல் 


போராட்ட வாழ்த்துக்களுடன் 

S .சிவகுருநாதன்,மாவட்ட செயலர்  

No comments:

Post a Comment