Total Pageviews

Wednesday, April 08, 2015

     செய்திகள்

  NFTE சங்க மத்திய செயற்குழு 
ஏப்ரல் 09.04.215&10.04.215 ஜெய்ப்பூரில் 
நடை பெறுகின்றது . இன்று சவாலாக 
உள்ள பல பிரச்சினைகள் பற்றி விவாதித்து 
                   முடிவுகள் எடுக்கப்படும் .                       

***********

            01.04.2015 முதல் உயர்ந்துள்ளது 0.2 சத IDA உயர்விற்கான உத்திரவு  
DPE யால் 06.04.2015 அன்று வெளியிடப்பட்டுள்ளது . BSNL  உத்திரவு விரைவில் வெளியிடப்படும் .       
இதனிடையே அரிசி ,முட்டை ,மீன் ,வெங்காயம் ,சீனி ,பெட்ரோல், 
மலர்கள் போன்ற பொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் 
IDA அதிக அளவு உயரவில்லை எனவும் , கோதுமை ,பருப்பு , 
சமையல் எண்ணெய், இறைச்சி போன்றவைகளின் விலை  உயர்ந்துள்ளதால் IDA குறையாமல் காக்கப்பட்டுள்ளது எனவும் தொழிலாளர்  துறை தெரிவித்துள்ளது .
                     
மேலும் நாட்டிலேயே திருச்சி மையத்தில் விளைவசிப்புள்ளி 
7 புள்ளிகள்  விழ்ச்சி அடைந்ததே IDA  உயராததற்கு காரணம் என்றும் 
கூறப்பட்டுள்ளது . 
  
************

                       BSNL லில் உழியர்களுக்கு குடியிருப்பு வீடுகள் ஒதுக்கீட்டில் 2சதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது .

************ 
சில நாட்களுக்கு முன்  BSNL லில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகின,இது தவறான  செய்தி என்று BSNL நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது . 


***********

ஓய்வூதியம் பெறும் தோழர்கள் தங்களுடைய வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது . இதன் மூலம் மின்னணு முறையில் உயிர்ச்சான்றிதழ் LIFE CERTIFICATE கொடுக்க எளிதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது .

*********

மத்திய அரசின் மின்னணு இந்தியா DIGITAL INDIA திட்டத்தின் கீழ் இதுவரை 20000 கிராமங்களுக்கு அகன்ற அலைவரிசை  
BROAD BAND வசதி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

இன்னும் இரண்டு ஆண்டுகளில் 20000கோடி செலவில் 250000 கிராமங்களுக்குஇவ்வசதி அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது .

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள மாநிலங்களில் மாதம் ரூ .150/= என்ற அளவிலும்
முன்னேறிய  மாநிலங்களில் மாதம் 
ரூ .250/= என்ற அளவிலும்கட்டணங்கள் வசூலிக்கப்படும் .


S. சிவகுருநாதன் மாவட்ட செயலர்  

No comments:

Post a Comment