Total Pageviews

Sunday, June 28, 2015



TTA தோழர்களுக்கு...
 ஒரு கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை...

 

01-01-2007க்குப்பின் பணியில் சேர்ந்த TTA தோழர்களுக்கு
10-05-2010 முதல் கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை 
வழங்கிட BSNL BOARD ஒப்புதல் அளித்துள்ளது. 

01-01-2007க்குப்பின் பணியில் சேர்ந்த TTA தோழர்களுக்கு
30 சத ஊதிய நிர்ணயம் செய்யப்படாததால் 
பெரும் ஊதிய இழப்பு தொடர்ந்தது. 

நமது NFTE மத்திய சங்கமும்... SNATTA சங்கமும்... இணைந்து 
மிக நீண்ட நாட்களாக இப்பிரச்சனையை தீர்க்கக்கோரி 
நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். தற்போது இந்த பிரச்சனை 
முழுமையாக தீர்க்கப்படா விட்டாலும் 5க்கு 2 பழுதில்லை 
என்ற கணக்கில் தீர்வை எட்டியுள்ளது.

மேற்கண்ட இந்த முடிவு TTA தவிர வேறு கேடர்களுக்கு
பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. 

01-01-2007க்குப்பின்...  
பல ஆயிரம் தோழர்களுக்கு ஆண்டு உயர்வு தேக்க நிலை தொடருகிறது...
சேவையில் மூத்தோர் இளையோர் சம்பள முரண்பாடு தொடருகிறது...
நாலு கட்டப்பதவி உயர்வால் ஏற்பட்ட குழப்பங்கள் தொடருகிறது...
ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் செய்வதில் தாமதம் தொடருகிறது...
பதவிப்பெயர் மாற்றம் செய்வதில் அலட்சியம் தொடருகிறது...



இப்படியாக சலிப்புக்கள் தொடர்ந்தாலும்... 
ஆறுதல் பரிசாக TTA தோழர்களின் பிரச்சனை 
 தன்னால் முடிந்தவரை தீர்வை எட்டியுள்ளது.

S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment