Total Pageviews

Thursday, June 04, 2015


செய்திகள் 


இரவு நேர இலவச அழைப்புகளை அமுல்படுத்தியதையொட்டி 

ஜூன் 15 முதல் நாடு தழுவிய இலவச ஊர்சுற்றும் 

ROAMING வசதியை  BSNL அறிவித்துள்ளது. 

---------------------------------------

2014-15ம் நிதியாண்டில் BSNLன் வருமானம் 2.1 சதம் 

உயர்ந்துள்ளதாக இலாக்கா மந்திரி கூறியுள்ளார். 

பின்னோக்கிச்செல்லும் நிலையிலிருந்து BSNL முன்னோக்கி 

அடியெடுத்து வைப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

----------------------------------------

2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 

25 நகரங்களை தரம் உயர்த்தி மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஈரோடு,கோவை ஆகிய நகரங்கள் தரம் 

உயர்த்தப்பட்டுள்ளன. 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்காக 

இருந்தாலும் 01/04/2015ல் இருந்துதான்

 பணப்பலன் ஊழியர்களுக்கு கிடைக்கும். 

----------------------------------------

வருமான வரித்தாக்கல் செய்வதற்காக ஏற்கனவே உள்ள 

விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய 

விண்ணப்பங்கள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. வருமான 

வரித்தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 ஆகும்.

-----------------------------------------

விலைவாசிப் புள்ளிகளின் உயர்வையொட்டி ஜூலை 2015 

முதல் 1.6  முதல் 2 சதம் வரை  

IDA  உயர வாய்ப்புள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

-------------------------------------------

4G சேவை வசதியை  அடுத்த ஆண்டு துவக்குவதற்கு 

BSNL  திட்டமிட்டுள்ளது. இதற்காக 39000 கோடி அடுத்த 5 

ஆண்டுகளில் முதலீடு செய்யப்படும். AIRTEL நிறுவனம் 

ஏற்கனவே 23 நகரங்களில் 

இந்த சேவையை துவங்கி விட்டது. RELIANCE நிறுவனம் 

அடுத்த மாதம் துவக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

------------------------------------------

பதவிப்பெயர் மாற்றக்குழு DESIGNATION COMMITTEE  மற்றும் 

போனஸ்குழுக்கூட்டங்களை உடனடியாக கூட்டக்கோரி 

நமது மத்திய சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

-------------------------------------------

ஆந்திர மாநில அரசு 01/07/2013 முதல்  தனது ஓய்வூதியர்களுக்கு
 
43 சத ஓய்வூதிய உயர்வை அறிவித்துள்ளது. 

02/06/2014 முதல் நிலுவை வழங்கப்படும். 

--------------------------------------------

BSNLலில் ஓய்வு பெற்ற தோழர்களுக்கு  78.2 சத IDA இணைப்பு 

வழங்குவதற்கான குறிப்பு DOT நிதிப்பிரிவால் ஒப்புதல் 

அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமான சம்பிரதாயங்களுக்குப்பின் 

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.  


S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment